உள்ளூர் செய்திகள் (District)

கோடம்பாக்கத்தில் கஞ்சா விற்பனை மோதலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு- ரவுடி கைது

Published On 2023-05-09 10:29 GMT   |   Update On 2023-05-09 10:29 GMT
  • தகராறில் அய்யப்பன், தனது கூட்டாளியான ராஜி என்கிற குள்ள ராஜூடன் சேர்ந்து ஜோசப்பை அரிவாளால் வெட்டினார்.
  • கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரும்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி அய்யப்பனை கைது செய்தனர்.

அம்பத்தூர், பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். ரவுடியான இவன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது.

அய்யப்பனுக்கும் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியை சேர்ந்த சோகன் ஜோசப்(23) என்பவருக்கும் இடையே கஞ்சா விற்பனை தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இதில் ஏற்பட்ட தகராறில் அய்யப்பன், தனது கூட்டாளியான ராஜி என்கிற குள்ள ராஜூடன் சேர்ந்து ஜோசப்பை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த ஜோசப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரும்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி அய்யப்பனை கைது செய்தனர். அவனிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. அவனது கூட்டாளியான ராஜியை பிடிக்க விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News