உள்ளூர் செய்திகள் (District)

மதுராந்தகம் அருகே அரசு பஸ் மீது கார் மோதி சென்னை பெண் பலி

Published On 2023-07-09 06:47 GMT   |   Update On 2023-07-09 06:47 GMT
  • படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுராந்தகம்:

சென்னை, மதுரவால், கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் முத்துதுரை (வயது 50). இவரது மனைவி தங்க மேகலா (40). இவர்களது மகள்கள் முத்து ராதா (16), அக்ஷயா(13). இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று அதிகாலை காரில் புறப்பட்டனர். காரை டிரைவர் ஒருவர் ஓட்டினார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் கார் மதுராந்தகம் அருகே அச்சரப்பாக்கம் புறவழிச் சாலையில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது சாலையோரத்தில் ஒரு வளைவில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் மீது அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. காரில் இருந்த தங்கமேகலா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் முத்துதுரை, மகள்கள் முத்துராதா, அக்ஷயா மற்றும் டிரைவர் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News