உள்ளூர் செய்திகள் (District)

அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு ஓ.பி.எஸ். மகன் போனில் அழைப்பு

Published On 2022-08-27 05:03 GMT   |   Update On 2022-08-27 05:03 GMT
  • ஒரு கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் தற்போதைய மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக இருப்பவர்கள் அதிருப்தியில் இருப்பவர்கள்.
  • எந்த பக்கமும் சேராமல் இருக்கும் மூத்த நிர்வாகிகள் பற்றிய பட்டியல் தயாரித்து உள்ளார்கள்.

சென்னை:

அ.தி.மு.க.வில் இரு அணிகளும் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கோர்ட்டில் தெரிவித்து விட்டனர்.

பெரும்பான்மையான நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கத்தில் இருக்கிறார்கள். எனவே அந்த அணி பலமாக உள்ளது.

இருப்பினும் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்தும் ஆதரவாளர்களை திரட்டியும் தனியாக பொதுக்குழுவை கூட்டியும் சட்டப்படி நெருக்கடி கொடுத்து கட்சியை கைப்பற்றுவதில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரம் காட்டி வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் தற்போதைய மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக இருப்பவர்கள் அதிருப்தியில் இருப்பவர்கள். எந்த பக்கமும் சேராமல் இருக்கும் மூத்த நிர்வாகிகள் பற்றிய பட்டியல் தயாரித்து உள்ளார்கள்.

அவர்களை நேரில் சந்தித்து பேசவும் மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்துள்ளார்கள். இந்த குழுவினர் வீடு வீடாக சென்று அவர்களை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது கட்சியின் உள்கட்சி நிலவரங்களையும், எதிர்காலத்தை பற்றியும் எடுத்து சொல்கிறார்கள்.

பின்னர் அங்கிருந்த படியே ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுக்கு போன் போட்டு அவருடன் நேரில் பேச வைக்கிறார்கள்.

அப்போது அவர்களிடம் பேசும் ஓ.பி.எஸ். மகன் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கிறார். 'அண்ணே வாங்க, எதிர்காலம் நல்லாயிருக்கும் யோசிச்சு முடிவு எடுங்கள்' என்றும் கூறி வருகிறார்.

அதை கேட்டு பலர் ஓ.பி.எஸ். தலைமை ஏற்று சேர்ந்து வருகிறார்கள். நேற்று நடிகர் பாக்கியராஜ் இணைந்தார். அதை போல் பல நிர்வாகிகள் இப்போது இணைந்து வருகிறார்கள். முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் இணைந்து உள்ளார்கள்.

Tags:    

Similar News