பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
- விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பட்டாபிராம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:
பட்டாபிராம் கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் மூர்த்தி இவரது மகன் கமலேஷ், 21. இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இன்று காலை 8.30 மணி அளவில் கமலேஷ் வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலம் வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வளைவில் அதிவேகமாக வந்த போது, திடீரென்று நிலை தடுமாறி ரெயில்வே மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி நிலை தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிச் சென்று அவரை மீட்டு போரூர் ராமச்சந்திரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் கமலேஷ் வழியிலே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பட்டாபிராம் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹெல்மட் அணியாததும், அதிவேகமாக சென்றதுமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.