உள்ளூர் செய்திகள் (District)
பழவந்தாங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டெய்லர் பலி
- விபத்தில் பலத்த காயம் அடைந்த சுந்தரலிங்கம் பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழவந்தாங்கல் பி.வி நகரை சேர்ந்தவர் சுந்தர லிங்கம்(35).டெய்லர். இவர் மோட்டார் சைக்கிளில் பி.வி நகர் 3-வது தெருவில் சென்றபோது வேகத்தடையில் ஏறி இறங்கினார்.
இதில் நிலைதடுமாறிய சுந்தர லிங்கம் மோட்டார் சைக்கிளோடு அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த சுந்தரலிங்கம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.