உள்ளூர் செய்திகள் (District)

பள்ளத்தில் கார் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த 3 பேர் படுகாயம்

Published On 2023-03-06 09:12 GMT   |   Update On 2023-03-06 09:12 GMT
  • பிரகாஷ் நேற்று இரவு தனது காரில் மனைவி மற்றும் மகளுடன் நெல்லை புறப்பட்டார்.
  • கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி பகுதியில் வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது39). இவரது மனைவி சாந்தினி. இவர்களுக்கு சாரா (3) என்ற மகள் உள்ளார். பிரகாஷ் நேற்று இரவு தனது காரில் மனைவி மற்றும் மகளுடன் நெல்லை புறப்பட்டார். அவர்கள் இன்று அதிகாலை கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி பகுதியில் வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பிரகாஷ் உள்பட 3 பேரும் காயமடைந்தனர்.

Tags:    

Similar News