உள்ளூர் செய்திகள் (District)
திருக்கழுக்குன்றத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
- வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது மோதியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன், (வயது65) கூலித் தொழிலாளி. இவர் சைக்கிளில் திருக்கழுக்குன்றத்தில் இருந்து காட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
நரப்பாக்கம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.