கானாத்தூரில், இன்று கிறிஸ்தவ சமூக நீதி பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா- திருமாவளவன் பங்கேற்பு
- திருமாவளவனுக்கு செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டில் செங்கல்பட்டு நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
- வக்கீல்கள் கோபிநாத், அன்பு செல்வன், மாவட்ட செயலாளர் தமிழரசன் மற்றும் வி.சி.க கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வாகனங்களில் சென்று வரவேற்பு அளிக்கின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கானாத்தூர் பகுதியில் கிறிஸ்தவ சமூக நீதி பேரவை சார்பில் கிறிஸ்தவ பெருவிழா இன்று மாலை நடக்கிறது.
விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொள்கிறார். விழாவில் பங்கேற்க செல்லும் திருமாவளவனுக்கு செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டில் செங்கல்பட்டு நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
இதில் வக்கீல்கள் கோபிநாத், அன்பு செல்வன், மாவட்ட செயலாளர் தமிழரசன் மற்றும் வி.சி.க கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வாகனங்களில் சென்று வரவேற்பு அளிக்கின்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன், வி.ஜி.சந்தோசம் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.