உள்ளூர் செய்திகள்

உவரி அருகே இடப்பிரச்சினையில் முதியவர் சரமாரி வெட்டிக்கொலை- தம்பி மகன் கைது

Published On 2022-06-06 05:01 GMT   |   Update On 2022-06-06 05:01 GMT
  • முதியவர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
  • நெல்லை மாவட்டம் உவரி அருகே முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தம்பி மகனை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள ராமன் குடி கீழத்தெருவை சேர்ந்தவர் மூக்கன் என்ற கணேசன் (வயது 70).

இவர் அதே பகுதியில் உள்ள தனது பூர்வீக இடத்தில் மகளுடன் வசித்து வந்தார். இவரது உடன்பிறந்த தம்பி மகன் நாகலிங்கம் என்ற பாக்கியராஜ் (35).

இவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று மாலை ராமன் குடிக்கு வந்த பாக்கியராஜ் தனது பெரியப்பாவிடம் தனக்கு வீடு கட்ட இடம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கணேசன் மறுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாக்கியராஜ் அரிவாளால் கணேசனின் தலையில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த அவரை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக அவர் இறந்தார்.

இதுதொடர்பாக பாக்கியராஜை உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News