உள்ளூர் செய்திகள் (District)
திருவள்ளூரில் தி.மு.க.பிரமுகரை வெட்டிய வழக்கில் 4 பேர் கைது
- கடந்த 4-ந்தேதி கலைவாணன், வீட்டில் இருந்து வெளியே வந்தபோது மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியா வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
- திருவள்ளூர் காந்திபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ், சந்தோஷ், சந்துரு என்கிற சந்திரசேகர், மற்றும் ஒரு சிறுவன் உள்பட மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் காந்தி புரத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி இந்திரா. இவர் திருவள்ளூர் நகராட்சி 16-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.
இவரது மகன் கலைவாணன். இவர் தி.மு.க.வில் நகர மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார். கடந்த 4-ந்தேதி கலைவாணன், வீட்டில் இருந்து வெளியே வந்தபோது மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியா வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கலைவாணனுக்கு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த திருவள்ளூர் காந்திபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ், சந்தோஷ், சந்துரு என்கிற சந்திரசேகர், மற்றும் ஒரு சிறுவன் உள்பட மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.