உள்ளூர் செய்திகள் (District)

நல்லூர் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி வாலிபர் பலி

Published On 2023-05-21 11:00 GMT   |   Update On 2023-05-21 11:00 GMT
  • இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • சோழவரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பொன்னேரி:

சோழவரம் அடுத்த விஜயநல்லூரை சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இன்று பிற்பகல் இருசக்கர வாகனத்தில் நல்லூர் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்த போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

மேலும் உயிரிழந்த நபரின் சடலத்தை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரிழந்த கண்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக நல்லூர் சுங்கச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News