உள்ளூர் செய்திகள் (District)
வளசரவாக்கத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் இலங்கை வாலிபர் கைது
- ராபின்சன் சார்லசை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
- போலியாக இந்திய பாஸ்போர்ட் பெற்று கனடா நாட்டுக்கு தப்பி செல்ல இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
போரூர்:
இலங்கையை சேர்ந்தவர் ராபின்சன் சார்லஸ் (43). வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். இவர் விசா காலம் முடிந்தும் தொடர்ந்து தங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராபின்சன் சார்லசை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அப்போது அவர் போலியாக இந்திய பாஸ்போர்ட் பெற்று கனடா நாட்டுக்கு தப்பி செல்ல இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் போலியான முகவரியை கொண்டு வங்கி கணக்கு தொடங்கி இருப்பதும், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் அட்டை மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ் ஆகியவற்றை போலியாக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.