உள்ளூர் செய்திகள்

குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட விஜய் வசந்த் எம்.பி.

Published On 2024-02-12 09:59 GMT   |   Update On 2024-02-12 10:00 GMT
  • குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் ஒதுக்கப்பட்டது.
  • தோவாளை காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம், ஊராட்சி தலைவர் திருமதி. சந்தியா சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பீமநகரி ஊராட்சிக்கு உட்பட்ட CMC நகர் பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அவர்கள் கோரிக்கை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம்  ஒதுக்கப்பட்டது.

அதற்கான பூமி பூஜையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தோவாளை காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம், ஊராட்சி தலைவர் திருமதி. சந்தியா சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News