உள்ளூர் செய்திகள் (District)

நீர் நிலைகளின் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- விஜய் வசந்த்

Published On 2024-10-26 03:45 GMT   |   Update On 2024-10-26 03:45 GMT
  • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படும் நிலையில் உள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே நீர் நிலைகளின் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News