உள்ளூர் செய்திகள்

தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Published On 2023-02-14 07:08 GMT   |   Update On 2023-02-14 07:08 GMT
  • தீண்டாமை கொடுமைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • மாவட்ட பொருளாளா் ராமசாமி, தொகுதி துணைச்செயலாளா் சக்திவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தாராபுரம் :

தமிழகத்தில் நிலவி வரும் தீண்டாமை கொடுமைகளை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் குண்டடம் காளிமுத்து தலைமை வகித்தாா். மேற்கு மண்டல துணைச் செயலாளா் ஒண்டிவீரன், வடக்கு மாவட்டச் செயலாளா் கனகசபாபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தமிழக வேலை வாய்ப்பை தமிழா்களுக்கே வழங்க வேண்டும், தமிழகத்தில் நிலவி வரும் தீண்டாமை கொடுமைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளா் வடிவேல், வக்கீல் அணி நிா்வாகி முருகையா பாண்டி, மாவட்ட பொருளாளா் ராமசாமி, தொகுதி துணைச்செயலாளா் சக்திவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா். 

Tags:    

Similar News