உள்ளூர் செய்திகள் (District)
வாழப்பாடி அருகே இளம்பெண் மாயமானார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மன்னாய்க்கன்பட்டி பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகள் கோமதி (வயது 19).நேற்று முன்தினம் காலை பால் சொசைட்டிக்கு பால் ஊற்ற செல்வதாக தெரிவித்து சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் தோழிகள் வீடுகளில் தேடியும் கிடைக்காத நிலையில், தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கோமதியின் தந்தை செல்லமுத்து வாழப்பாடி போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.