கோவையில் ஒரு தலை காதலால் வாலிபர் தற்கொலை
- ரிஷிதேவ் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோவை,
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சவுரவ்குமார் ரிஷிதேவ் (வயது 18). இவர் கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுரவ்குமார் ரிஷிதேவுக்கு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த இளம்பெண்ணை அவர் ஒரு தலையாக காதலித்து வந்தார். தன்னுடைய காதலை அந்த பெண்ணிடம் கூறியும் அவர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் கடந்த சில நாட்களாக சவுரவ்குமார் ரிஷிதேவ் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று அறையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்ததினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட சவுரவ்குமார் ரிஷிதேவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.