உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் வாலிபர் தற்கொலை

Published On 2023-04-17 09:12 GMT   |   Update On 2023-04-17 09:12 GMT
  • அருண்பாரதி ஷேர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.
  • அருண்பாரதிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது

கோவை

கோவை நம்பர் 4 வீரபாண்டியை அடுத்த ஆர்.எம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அருண்பாரதி (வயது24). இவர் ஷேர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமு டைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அருண்பாரதி வாழ்க்கையில் விரக்தி அடைந்து தனது வீட்டிற்க்கு சென்று வெகு நேரம் ஆகியும் வெளியே வரவி ல்லை. இதனால், சந்தே கமடைந்த உறவினர்கள் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. பின்னர் அருகில் இருந்த வர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பெரியநா யக்க ன்பாளையம் போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டது. தகவலறிந்த போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மிகுந்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும், வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News