உள்ளூர் செய்திகள்

ஜாமீனில் வந்த ரவுடி படுகொலை முதல் மனைவி- நண்பரிடம் அதிரடி விசாரணை

Published On 2023-05-05 07:13 GMT   |   Update On 2023-05-05 07:13 GMT
  • தாத–காப்–பட்டி கேட் அம்–பாள் ஏரி ரோடு பகு–தியை சேர்ந்–த–வர் விக்–னேஸ்–வ–ரன்.
  • பிர–பல ரவு–டி–யான இவர் மீது அடி–தடி, கொலை முயற்சி, வழிப்–பறி, அரிசி கடத்–தல், திருட்டு உள்–பட 7-க்கும் மேற்–பட்ட வழக்–கு–கள் உள்–ளன.

சேலம்:

சேலம் அன்–ன–தா–னப்–பட்டி தாத–காப்–பட்டி கேட் அம்–பாள் ஏரி ரோடு பகு–தியை சேர்ந்–த–வர் விக்–னேஸ்–வ–ரன். இவ–ரு–டைய மகன் ரஞ்–சித் என்ற ரஞ்–சித்–கு–மார் (வயது 30). பிர–பல ரவு–டி–யான இவர் மீது அடி–தடி, கொலை முயற்சி, வழிப்–பறி, அரிசி கடத்–தல், திருட்டு உள்–பட 7-க்கும் மேற்–பட்ட வழக்–கு–கள் உள்–ளன.

இந்த நிலை–யில், கடந்த ஆண்டு அன்–ன–தா–னப்–பட்டி கிராம நிர்–வாக அலு–வ–லரை தாக்–கிய வழக்–கில் ரஞ்–சித்–கு–மாரை போலீ–சார் கைது செய்–த–னர். பின்–னர் அவர் சேலம் மத்–திய சிறை–யில் அடைக்–கப்–பட்–டார்.

பொது–மக்–க–ளுக்கு அச்–சு–றுத்–தல் ஏற்–ப–டுத்–தும் வகை–யில் தொடர்ந்து குற்–றச்–செ–யல்–களில் ரஞ்–சித்–கு–மார் ஈடு–பட்டு வந்–த–தால் அவர் மீது குண்–டர் தடுப்பு சட்–டம் பாய்ந்–தது. இத–னி–டையே, கடந்த 20 நாட்–க–ளுக்கு முன்பு ரவுடி ரஞ்–சித்–கு–மார் ஜாமீ–னில் வெளியே வந்–தார். அவர் மாசி–நா–யக்–கன்–பட்டி பகு–தி–யில் 2-வது மனைவி பிரி–யா–வு–டன் வசித்து வந்–த–தாக கூறப்–படுகிறது.

நேற்று முன்–தி–னம் காலை வீட்–டில் இருந்து வெளியே சென்–ற–வர் அதன்–பி–றகு இரவு திரும்–ப–வில்லை. இத–னால் சந்–தே–கம் அடைந்த அவ–ரு–டைய மனைவி பிரியா மற்–றும் குடும்–பத்–தி–னர் பல்–வேறு இடங்–களில் தேடி–யும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது தொடர்–பாக அம்–மாப்–பேட்டை போலீஸ் நிலை–யத்–தில் உற–வி–னர்–கள் புகார் செய்–த–னர். அதன்–பே–ரில், போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து ரஞ்–சித்–கு–மாரை தேடி வந்–த–னர்.

இந்த நிலை–யில், உடை–யாப்–பட்டி வேடி–யப்–பன் கோவில் அருகே உள்ள குடி–நீர் குழாய் திறந்து விடப்–படும் தொட்டி பகு–தி–யில் நேற்று இரவு ரஞ்–சித்–கு–மார் கழுத்து அறுக்–கப்–பட்ட நிலை–யில் பிண–மாக கிடப்–ப–தாக அம்–மாப்–பேட்டை போலீ–சா–ருக்கு தக–வல் கிடைத்–தது. அதன்–பே–ரில், போலீ–சார் சம்–பவ இடத்–திற்கு சென்று விசா–ரித்–த–போது, ரஞ்–சித்–கு–மாரை கொலை செய்த மர்ம கும்–பல் அவ–ரது உடலை பள்–ளத்–தில் வீசி சென்–றி–ருப்–பது தெரி–ய–வந்–தது. ரஞ்–சித்–கு–மா–ரின் உடலை மீட்டு பிரேத பரி–சோ–த–னைக்–காக போலீ சார் சேலம் அரசு ஆஸ்–பத்–தி–ரிக்கு அனுப்பி வைத்–த–னர்.

விசாரணையில் ரஞ்–சித்–கு–மார் தனது முதல் மனை–வியை விட்டு பிரிந்து 2-வது மனை–வி–யான பிரி–யா–வு–டன் மாசி–நா–யக்–கன்–பட்–டி–யில் வீடு வாட–கைக்கு எடுத்து வசித்து வந்–துள்–ளார். ஆனால் அவ–ரது முதல் மனை–வி–யு–டன் நண்–பர் சுரேஷ் என்–ப–வர் நெருங்கி பழகி வந்–த–தா–க–வும், இது தொடர்–பாக அவர்–க–ளுக்–குள் தக–ராறு ஏற்–பட்டு வந்–த–தா–க–வும் கூறப்–ப–டு–கிறது. இதை–ய–டுத்து அக்–கம் பக்–கத்–தி–னர் ரஞ்–சித்–கு–மா–ரை–யும், சுரே–சை–யும் சமா–தா–னப்–படுத்தி விலக்கி விட்–டுள்–ள–னர்.

இந்த மோதல் தொடர்–பாக ரவுடி ரஞ்–சித்–கு–மார் கொலை செய்–யப்–பட்டு இருக்கலாம் என போலீ சாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், தனிப்படைகள் அமைத்து உத்தர விட்டுள்ளார். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார், கொலையாளி களின் உருவம் கண்டறிய கொலை நடந்த இடத்தின் அருகாமையில் ஏதேனும் சி.சி.டி.வி. காமிரா உள்ளதா? என பார்வை யிட்டு வருகின்ற னர். அது மிட்டுமின்றி ரஞ்சித்குமார் பயன்படுத்தி வந்த செல்போ னில் பதிவான அழைப்பு களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.இதை தவிர முதல் மனைவி மற்றும் அவரது நண்பர் சுரேஷையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த நிலையில் கொலையாளிகள் திருப்பூ ரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசார் அங்கு சென்று முகாமிட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபடும் பட்சத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது.

Tags:    

Similar News