உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேயர்

Published On 2022-12-22 07:45 GMT   |   Update On 2022-12-22 07:45 GMT
  • பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
  • பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மாநகராட்சி பகுதிகளில் தினமும் ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின் போது பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக பல்வேறு திட்டங்களையும் மாநகராட்சி சார்பில் செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மக்களுடன் மேயர் என்ற திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு அதனை நிவர்த்தி செய்து வருகிறார்.

இந்நிலையில் மக்களுடன் மேயர் திட்டத்தில் மாநகராட்சி 52-வது வார்டு பகுதியில் மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது அங்கு சாலை பணிகள் உள்ளிட்ட பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

Tags:    

Similar News