உள்ளூர் செய்திகள்

கைதான ஹெலீம் அலாசிஸ்.

திருட்டு வழக்கில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-09-17 09:25 GMT   |   Update On 2022-09-17 09:25 GMT
  • அடையாளம் தெரியாத நபர் அந்த நகையை திருடி சென்று விட்டார் .
  • குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

அரூர்,

தருமபுரி மாவட்டம் அரூர் காவல் எல்லைக்குட்பட்ட ராயப்பன் கொட்டாய் கிராமத்தில் வெங்கடாசலம் மனைவி சுந்தரம்மாள் (வயது 60) என்பவர் சிறிய மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு மளிகை கடையில் பொருட்களை சரி செய்து கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத நபர் அந்த நகையை திருடி சென்று விட்டார் .

இது குறித்து சுந்தரம்மாள் அரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அரூர் காவல் துறையினர் திருட்டு வழக்கில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் வீராணம் பகுதியைச் சேர்ந்த தயாநிதி மகன் ஹெலீம் அலாசிஸ் (22) என்பவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

இவர் நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க, தருமபுரி காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் பரிந்து ரையின் பேரில்,கலெக்டர் சாந்தி , குற்றவாளி ஹெலீம் அலாசிஸ் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் அரூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபு , ஹெலீம் அலாசிஸ் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News