உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் ஆடு திருடியவரை மடக்கி பிடித்த பொதுமக்கள்

Published On 2023-01-21 09:24 GMT   |   Update On 2023-01-21 09:24 GMT
  • சுதாகரின் ஆடு நேற்று மாலை வீட்டின் முன்பு மேய்ந்து கொண்டு இருந்தது.
  • விசாரணையில் திருமணி என்பவர் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்தவர் சுதாகர் (வயது 34). நேற்று மாலை இவரது ஆடு வீட்டின் முன்பு மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் காரில் அந்த ஆட்டை திருடி சென்றார். இதனை பார்த்த சுதாகர் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக பொதுமக்கள் திரண்டு வந்து அவர்களை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் டென்சன்பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் தூத்துக்குடி ராஜூ நகர் 6-வது தெருவை சேர்ந்த திருமணி (42) என்பவர் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News