உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

Published On 2023-05-02 08:07 GMT   |   Update On 2023-05-02 08:07 GMT
  • கடந்த 30-ந்தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றார்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள மாதம்பதி பகுதியை சேர்ந்தவர் 17-வயது மாணவி. இவர் கடந்த 30-ந்தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றார்.

பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News