கணவரை பின்தொடர்ந்து சென்ற இளம்பெண் திடீர் மாயம்
- பாலக்காட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
- மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லாமல் நின்றது.
கோவை,
கோவை கணபதி அருகே உள்ள பதி கவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். வெல்டர். இவரது மனைவி ஷீபா (வயது 33). இவர்களது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு.
சம்பவத்தன்று இவர்கள் பாலக்காட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் வீட்டிற்கு திரும்பினர். மோட்டார் சைக்கிள் உக்கடம் ராஜவீதியில் வந்து கொண்டு இருந்த போது திடீரென மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லாமல் நின்றது.
இதனையடுத்து சுரேஷ் மோட்டார் சைக்கிளை பெட்ரோல் பங்க் நோக்கி தள்ளிச் சென்றார். ஷீபா பின்னால் நடந்து சென்றார். சிறிது தூரம் சென்று பார்த்த போது அவரது மனைவியை காணவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த அவர் தனது மனைவியை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து உக்கடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மாயமான ஷீபாவை தேடி வருகிறார்கள்.