உள்ளூர் செய்திகள்

மர்மநபர்கள் திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.

சூப்பர் மார்க்கெட்டில் ரூ.1 லட்சம் திருட்டு

Published On 2022-11-11 07:52 GMT   |   Update On 2022-11-11 07:52 GMT
  • 6 கவுண்டர்களில் கல்லாவில் இருந்த பணம் திருட்டு.
  • இரண்டாவது தளத்தில் உள்ள லிப்ட் வழியாக உள்ளே சென்று பணம் திருட்டு.

பேராவூரணி:

பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் நள்ளிரவில் இங்கு வந்த மர்ம நபர்கள் மாடி வழியாக இறங்கி கடையில் உள்ள பொருட்களை திருடி உள்ளனர். மேலும், 6 கவுண்டர்களில் கல்லாவில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சம் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த பேராவூரணி இன்ஸ்பெக்டர் செல்வி சம்பவ இடத்திற்கு சென்று கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது இரண்டாவது தளத்தில் உள்ள லிப்ட் வழியாக உள்ளே சென்று பணம் திருடி சென்றது தெரியவந்தது.

முகத்தை துணியால் மூடிய நிலையில் திருடிய நபர் பச்சை கலர் டி சர்ட் மற்றும் கருப்பு கலர் டிராயர் அணிந்து இருந்தார்.

இது பற்றி மன்சூர் அலி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News