உள்ளூர் செய்திகள் (District)

கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது

Published On 2023-07-15 09:20 GMT   |   Update On 2023-07-15 09:20 GMT
  • 50 கிராம் கஞ்சா பறிமுதல்
  • வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்

செய்யாறு:

செய்யாற்று பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை நடப்பதாக செய்யாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது பாலத்தின் கீழ் நின்றிருந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். வாலிபர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்து தெரியவந்தது.

போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் செய்யாறு பகுதியை சேர்ந்த அபினேஷ் (வயது 22), பிரவீன் (20), என்பதும், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த எக்னேஷ் (20). என்பதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News