உள்ளூர் செய்திகள்

பைக் திருடிய வாலிபர் கைது

Published On 2023-07-15 09:22 GMT   |   Update On 2023-07-15 09:22 GMT
  • ரோந்துப் பணியில் சிக்கினார்
  • போலீசார் விசாரணை

வந்தவாசி:

வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற் றும் போலீசார் நேற்று அதிகாலை வந்தவாசி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமய் யர் தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்த முயன்றனர். அவர் மோட்டார் சைக்கிளை ரோட்டிலேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதையடுத்து போலீசார் பைக்கை பறிமுதல் செய்து, அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் தப்பி ஓடியவர் பொட்டிநாயுடு தெருவில் இருந்து மோட்டார்சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீ சார் வந்தவாசி 5 கண் பாலம் அருகில் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த திலீப் (வயது 23) என்பது தெரி யவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப்பை கைது செய்தனர்.

Tags:    

Similar News