உள்ளூர் செய்திகள் (District)

கைது செய்யப்பட்டவர்கள்.

பத்திர விற்பனையாளரிடம் ரூ.60 ஆயிரம் திருடியவர்கள் கைது

Published On 2023-04-18 08:33 GMT   |   Update On 2023-04-18 08:33 GMT
  • ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் வெற்று பத்திரத்துடன் கூடிய பையை வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
  • திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

சுவாமிமலை:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 60). இவர் பத்திர விற்பனையாளராக உள்ளார்.

இவர் சம்பவத்தன்று தனது சைக்கிளின் முன்பக்க கூடையில் ரூ.60,000 பணம் மற்றும் வெற்று பத்திரத்துடன் கூடிய பையை வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.

இதனை நோட்டமிட்டு அவரை மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்றனர். சுவாமிமலை அருகே வந்தபோது பணத்தை திருடி கொண்டு தப்பினர்.

இது குறித்துழ சுந்தர் சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின்பேரில் கும்பகோணம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார் மேற்பா ர்வையில் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்ப ட்டது.

தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படையினர்.

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கபிஸ்தலம் மந்தகார தெருவை சேர்ந்த செந்தில் ராம்குமார் (47), கோவிந்தகுடி கம்மாளர் தெருவை சேர்ந்த குழந்தைவேலு (24), பட்டீஸ்வரம் நந்தமேட்டை சேர்ந்த வெற்றி (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியு ள்ளனர்.

Tags:    

Similar News