உள்ளூர் செய்திகள் (District)
இல்லம் தேடி கல்வி மையத்தில் முப்பெரும் விழா
- சந்திரயான்-3 வெற்றி விழா, ஆசிரியர் தினவிழா மற்றும் இலவச கல்வி மையம் தொடக்க விழா நடந்தது.
- மாணவர்கள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அடுத்த தேசிங்குராஜ புரத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தில் சந்திரயான்-3 வெற்றி விழா, ஆசிரியர் தினவிழா மற்றும் இலவச கல்வி மையம் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
இதில் நாகை அன்பு உள்ளங்கள் சமூக அறக்கட்டளை நிறுவனர் ராஜாமணி கலந்து கொண்டு மாணவர்கள் அறிவியலை பயன்படுத்தும் விதம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என பேசினார்.விழாவில் சமூக ஆர்வலர் துரைமுருகன் மற்றும் கல்வி ஆர்வலர் ரவி, முருகவேல் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.
முடிவில் தன்னார்வலர் ரேவதி நன்றி கூறினார்.
விழாவை முன்னிட்டு மாணவர்கள் அனை வருக்கும் இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.