உள்ளூர் செய்திகள் (District)

தனியார் பள்ளி வாகனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.

தனியார் பள்ளி வாகனத்தில் தவறி விழுந்த 1-ம் வகுப்பு மாணவன்

Published On 2023-10-12 07:12 GMT   |   Update On 2023-10-12 07:12 GMT
  • பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
  • இனிமேல் தவறுகள் நடக்காது என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை மங்களம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் இவரது மகன் சசிதரன் (வயது 5).

இவர் ஏலகிரி மலையில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி மாணவன் தினமும் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்று வீடு திரும்புவார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளி வாகனத்தில் மங்களம் பகுதியில் பள்ளி மாணவ மாணவிகள் ஏற்றிச் செல்ல நின்றது.

அப்போது மாணவர்கள் வாகனத்தில் ஏறிக் கொண்டு இருந்தனர்.

அப்போது டிரைவர் வாகனத்தின் கதவை சரியாக அடைக்கவில்லை. அதற்குள் வாகனத்தை இயக்கியதால் கதவு அருகே அமர்ந்து இருந்த சசிதரன் தவறி கிழே விழுந்தான். சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனால் அப்பகுதி பொது மக்கள் வாகனத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகிகள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காது என கூறியதன் பேரில் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News