உள்ளூர் செய்திகள் (District)

பைக் விபத்தில் 2 பேர் படுகாயம்

Published On 2023-11-15 07:35 GMT   |   Update On 2023-11-15 07:35 GMT
  • நேருக்கு நேர் வேகமாக மோதியது
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு அருகே உள்ள கூவல்குட்டை பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்( வயது 28). இவர் தனது பைக்கில் ஆலங்காயம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது புலவர்பள்ளி ஏரிகரையில் எதிரே வந்த பைக் அரவிந்த் சென்ற பைக் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது.

பைக்கில் வந்த அர்விந்த் மற்றும் வினோத்(30) ஆகிய 2 பேரும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு மாற்றம் செய்யப்ப ட்டனர்.

இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News