உள்ளூர் செய்திகள் (District)

கோப்புப்படம்

கோவிலில் திருட முயன்ற வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது

Published On 2023-10-14 08:05 GMT   |   Update On 2023-10-14 08:05 GMT
  • வேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்
  • கண்காணிப்பு கேமராவில் பதிவு

ஆம்பூர்:

ஆம்பூர் பைபாஸ் சாலை அருகே நாகாலம்மன் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் 2 நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருட முயற்சி செய்துள்ளனர். திருட முடியாததால் திரும்பி சென்றனர். இந்த காட்சிகள் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஜவகர்லால் நேரு தெருவை சேர்ந்த சரவணன் (வயது 20) மற்றும் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் சிறுவனை வேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News