உள்ளூர் செய்திகள் (District)

ரூ.3 கோடியில் விளையாட்டு அரங்கம் கட்ட அடிக்கல்

Published On 2023-11-03 08:35 GMT   |   Update On 2023-11-03 08:35 GMT
  • மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
  • உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்பு

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணையத்தின் ரூ.3.கோடி மதிப்பீட்டிலான சிறு விளையாட்டு அரங்கத்தை அமைக்க முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் எம்.எல். ஏககள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் வரவேற்று மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஒன்றியக் குழுத் தலைவர் சங்கிதாபாரி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், திமுக ஒன்றிய அவைத் தலைவர் எஸ்.பழனி, ஒன்றிய கவுன்சிலர் ப்ரித்தாபழனி, திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வி.எஸ்.கார்த்திக், உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News