உள்ளூர் செய்திகள் (District)

விபத்தில் சேதமடைந்த வாகனங்கள்.

பஸ் மீது கன்டெய்னர் மோதி விபத்து

Published On 2023-10-21 08:14 GMT   |   Update On 2023-10-21 08:14 GMT
  • பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம்
  • அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 45). தனியார் ஷூ கம்பெனி பஸ் டிரைவர். இவர் இன்று அதிகாலை வேலைக்கு ஆட்களை ஏற்றுவதற்காக ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார்.

பெண்கள் உட்பட ஷூ கம்பெனி தொழிலாளர்கள் சிலர் பஸ்சில் ஏறிக்கொண்டிருந்தனர்.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு கூரியர் ஏற்றி செல்லும் பார்சல் கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென தொழிலாளர்களை ஏற்றி கொண்டிருந்த பஸ் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பெண்கள் உட்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News