உள்ளூர் செய்திகள் (District)

சிறுத்தை ஊருக்குள் நுழைந்து 5 ஆடுகளை குதறியது

Published On 2023-11-11 08:06 GMT   |   Update On 2023-11-11 08:06 GMT
  • கிராம மக்கள் பீதி
  • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரியில் வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளது.

இதில் முருகன் குட்டை மற்றும் கீழ் குட்டை கிராம பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். ஆந்திர வனப்பகுதியில் நடமாடும் இந்த சிறுத்தை தமிழக எல்லைப் பகுதிக்கு தற்போது வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கீழ் குட்டை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஊருக்குள் நுழைந்து 4 ஆடுகளை கடித்துக் குதறியது. அதேபோல் நேற்று இரவும் முருகன் குட்டை பகுதியில் நுழைந்த சிறுத்தை பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகளை கடித்து குதறியுள்ளது.

ஆடுகளை சிறுத்தை கடித்து குதறும் காட்சிகள், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தகவல் சுற்றுவட்டார கிராம மக்களிடம் காட்டு தீப்போல் பரவியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

இரவு நேரங்களில் மக்கள் வெளியே வராமல் அச்சைமடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News