உள்ளூர் செய்திகள் (District)

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2023-11-05 08:46 GMT   |   Update On 2023-11-05 08:46 GMT
  • ரூ.5,00,000 விருது தொகை வழங்கப்படும்
  • கலெக்டர் தகவல்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் பெயரில் தமிழ்நாடு அரசால்

விருது வழங்கப்படுகிறது. பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்து வதற்கு, வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்ட ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

இந்தஆண்டிற்கான விருது. 2024-ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.5,00,000 விருது தொகையும், 8 கிராம் தங்கப்பதக்கமும். இதர செலவினங்களுக்கு ரூ.65,000 சேர்த்து மொத்தம் ரூ.5.65,000 வழங்கப்பட உள்ளது.

எனவே 2023-2024 ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருதுக்கு தகுதியான பட்டியலினத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அம்பேத்கர் விருது வழங்குவதற்கான விண்ணப்பத்தை, திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் வருகிற 10-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News