உள்ளூர் செய்திகள்

3 வீடுகளில் கொள்ளையடிக்க முயற்சி

Published On 2022-08-21 09:35 GMT   |   Update On 2022-08-21 09:35 GMT
  • பைக்கை திருடி சென்றனர்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி குதுவு மேடு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (வயது 37).

இவரது வீட்டில் நேற்று விடியற்காலை 3 மணி அளவில் வீட்டில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தை மர்ம ஆசாமிகள் யாரோ திருடி சென்றனர்.

அப்போது அந்த வாகனத்தில் பெட்ரோல் இல்லாததால் அருகே தேவராஜ் (வயது 53) என்பவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் டியூப் அறுத்து அதிலிருந்த பெட்ரோலை திருடிக் கொண்டு ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் ஸ்கூட்டி திருடிக் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் இருசக்கர வாகனத்தில் சென்று அருகே உள்ள நடராஜன் (வயது 37) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர் ஆனால் பீரோவில் எதுவும் இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்த ரூபாய் 150 மட்டும் இருந்ததால் அதனையும் விட்டு வைக்காமல் திருடி சென்றுள்ளனர்.

இது சம்பந்தமாக காந்தி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News