உள்ளூர் செய்திகள் (District)

குட்கா விற்ற பங்க் கடைக்காரர் கைது

Published On 2023-07-15 09:26 GMT   |   Update On 2023-07-15 09:26 GMT
  • போதை பொருட்கள் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் உமராபாத் பஸ் நிலையத்தில் நவ நீத கிருஷ்ணன் (வயது 30) என்பவர் பங்க்கடை நடத்தி வருகிறார்.

இந்த கடையில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பங்க்கடையில் சோதனை செய்தனர். அப்போது கடையில் குட்கா போன்ற போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. போலீசார் குட்கா பாக்கெட் கடை பறிமுதல் செய்தனர்.

மேலும் நவநீதகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது சம்பந்தமாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News