உள்ளூர் செய்திகள் (District)

விவசாயிகளுக்கு இடு பொருட்கள்

Published On 2023-10-20 09:44 GMT   |   Update On 2023-10-20 09:44 GMT
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதை மையம்
  • கேழ்வரகு விதை, கொள்ளு, மா மற்றும் எலுமிச்சை செடி

ஜோலார்பேட்டை:

ஏலகிரி மலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதை மையம் சார்பில் பழங்குடியின விவசாயிகள் நலத்திட்ட மூலம் விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி மற்றும் அரிவாள், களைக்கொத்து, கேழ்வரகு விதை, கொள்ளு, மா மற்றும் எலுமிச்சை செடி உள்ளிட்ட விவசாய இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றி 100 விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கினார்.

Tags:    

Similar News