உள்ளூர் செய்திகள் (District)

தி.மு.க. பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

Published On 2023-10-20 09:50 GMT   |   Update On 2023-10-20 09:50 GMT
  • தேவராஜி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. முகவர்களின் (பூத் கமிட்டி) ஆலோசனை கூட்டம் நேற்று வாணியம்பாடி நியு டவுன் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன் முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க. செயலாளர் சாரதிகுமார் வரவேற்றார்.

கூட்டத்தில் தேவராஜி எ.எல்.ஏ., வாணியம்பாடி தொகுதி பார்வையாளர் டி.செங்குட்டுவன் மற்றும் திமுக நிர்வாகிகள் முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.ஞானவேலன்(ஆலங்காயம் மேற்கு), எஸ்.தாமோதிரன் (ஆலங்காயம் கிழக்கு), கே.ஆர்.திருப்பதி(திருப்பத்தூர் கிழக்கு), டி.சாமுடி (நாட்றம்பள்ளி கிழக்கு), உதயேந்திரம் பேரூர் செயலாளர் ஆ.செல்வராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் பூ.சதாசிவம், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News