உள்ளூர் செய்திகள் (District)

அறுந்து விழும் மின்கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்

Published On 2023-11-10 09:10 GMT   |   Update On 2023-11-10 09:10 GMT
  • மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தல்
  • வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் எச்சரிக்கை

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியா ளர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மழையாலும், காற்றாலும் அறுந்து விழும் மின் கம்பிகள் அருகே செல்லக்கூடாது.

மின்கம்பம், அவற்றை தாங்கும் மின்கம்பிகளில் விளம்பர பலகைகளை வைக்கக்கூடாது. மின்னல் ஏற்படும்போது வெட்ட வெளி, மரங்கள், மின்கம் பங்கள், மின்கம்பிகள் அடியில் செல்லக்கூடாது. கான்கிரீட் கட்டிடங்களில் தஞ்சம் அடைய வேண்டும்.

மின்கசிவுகளை கண்டறிந்து விபத்துகளை தடுக்க உதவும் ஆர்.சி.சி.பி.யை வீடு, கடை, கோவில், பள்ளிகளில் பொருத்த வேண்டும். டிப்பர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை மின்பாதை அருகில் நிறுத்தி வைக்கக்கூடாது.

கேபிள் டி.வி. ஒயர்களை மின்கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. மின்மாற்றி, மின்கம்பங்களில் மின்வாரிய பணியாளர் களை தவிர வேறுயாரும் ஏறக்கூடாது.

விவசாய நிலத்தில் மின்வேலி அமைக்கக்கூ டாது. அறுந்து விழுந்த மின்சார கம்பிகளின் அருகில் செல்லக்கூடாது. மின்ஒயர் அறுந்து கிடந்தால் மின்வாரிய அலுவலகத்திற்கு அல்லது மின்தடை புகார் மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News