- நேருக்கு நேர் மோதியது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி சின்னசாமி தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 50) லாரி டிரைவர். இவர் நேற்று இரவு தனது பைக்கில் கிருஷ்ணகிரியில் இருந்து நாட்டறம்பள்ளி பங்களா மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நாட்டறம்பள்ளி மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் வசீகரன் (வயது20) என்பவர் ஓட்டி வந்த பைக்கும், கோவிந்தசாமி ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்து பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மேல் சிகிச்சைக்காக கோவிந்த சாமியை கிருஷ்ணகிரி அரசு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கோவிந்தசாமி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கோவிந்த சாமி மகன் பாபு இன்று காலை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் நாட்டம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.