உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி டிரைவர் பலி

Published On 2023-02-14 09:50 GMT   |   Update On 2023-02-14 09:50 GMT
  • உறவினர் வீட்டு விழாவுக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மாரியம்மன் கோவில் பகுதியை சதீஷ் (வயது 35) லாரி டிரைவர்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆம்பூரில் உள்ள உறவினர் காதணி விழாவுக்கு சென்றார்.

பின்னர் விழா முடிந்து ஆம்பூர் பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த வாகனம் சதீஷ் மீது மோதியது.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சதீஷ்சை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சதீஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News