உள்ளூர் செய்திகள் (District)

முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை

Published On 2022-10-09 09:30 GMT   |   Update On 2022-10-09 09:30 GMT
  • வியாபாரிகள் கடும் அவதி
  • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அதிபெரமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மின்வாரியம் சார்பில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் சிறு தொழில் செய்யும் தொழிற்சாலைகளும் அடிக்கடி மின்தடையால் மிகவும் அவதிப்பட்டு பாதிக்கப்படுகின்றன இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் இல.குருசேவ் மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு சீரான மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுத்தார்.

மேலும் தொடர்ந்து நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News