உள்ளூர் செய்திகள் (District)

நெடுஞ்சாலைதுறை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்

Published On 2023-10-21 08:16 GMT   |   Update On 2023-10-21 08:16 GMT
  • ஆலங்காயத்தில் 3 நாட்கள் நடக்கிறது
  • போலீஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்பு

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் சுற்றுவட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலை ஆக்கிரமிப்புகள் வரும் நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை அகற்ற படுவதாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கே.கே.ஞானசேகரன் அந்தந்த போலீஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் வாணியம்பாடி நெடுஞ்சாலை உட்கோட்டம் அப்துல்லாபுரம் முதல் ஆசனாம்பட்டு, ஆலங்காயம் திருப்பத்தூர் சாலை, ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முதல் ராஜபாளையம் கூட்ரோடு வரை, ஜமுனாமரத்தூர் ஆலங்காயம், வாணியம்பாடி சாலை, ஆலங்காயம் காலணி முதல் மார்கெட் சந்திப்பு சாலை வரை உள்ள ஜமுனாமரத்தூர் சாலை, பஸ் நிலையம் முதல் பைக் ேஷாரூம் வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.

அவ்வாறு ஆக்கிரமிப்பு களை அகற்றும் போது ஆக்கிரமிப்புகளை அகற்ற முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

Tags:    

Similar News