உள்ளூர் செய்திகள் (District)

அரசு மருத்துவமனையில் சுகாதார துறை இணை இயக்குநர் திடீர் ஆய்வு

Published On 2023-10-29 07:51 GMT   |   Update On 2023-10-29 07:51 GMT
  • அனைவரும் பணியில் சரியாக பணியாற்றி வருகின்றனரா என சோதனை
  • அளிக்கும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள கலைஞர் தெருவில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனையில் தினம்தோறும் 300 -க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலை யில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென்று அரசு மருத்து வமனைக்கு சென்றார். அப்போது டாக்டர்கள் செவிலி யர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் பணியில் சரியாக பணியாற்றி வருகின்றனரா என ஆய்வு செய்தார்.

அதன் பிறகு நோயாளிகளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் அனைத்தும் போதுமானதாக இருப்பு உள்ளதா எனவும் தமிழக அரசு வழங்கும் நிதி அரசு மருத்துவமனையில் சரியாக பயன்படுத்தி வருகின்றனரா எனவும் ஸ்கேன் மையத்தையும் நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் மருத்துவ மனை மற்றும் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகள் மட்டுமின்றி மருத்துவமனை முழுவதும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என இணை இயக்குநர் மாரிமுத்து கூறினார்.

ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர்கள், சுகாதார செவிலியர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News