உள்ளூர் செய்திகள் (District)

சமையல் பாத்திரங்கள் திருடியவர் கைது

Published On 2023-11-02 08:38 GMT   |   Update On 2023-11-02 08:38 GMT
  • மினி லாரி வைத்து ஏற்றி சென்றார்
  • போலீசார் விசாரணை

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தாக்(வயது 28) இவர் அதே பகுதியில் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை கடைக்கு வெளியே சாமான்களை வைத்து விட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது ரூ.6 ஆயிரம் மதிப்பிலான சமையல் பாத்திரங்கள் மாயமானது.

இதனால் அதிர்ச்சியடைந்த முகமது முஸ்தாக் அங்கு விசாரித்த போது சமையல் பாத்திரங்களை மில்லத் நகர் பகுதியை சேர்ந்த நதீம் என்பர் மினி லாரி வைத்து ஏற்றி சென்றது தெரியவந்தது.

இதை தொடர்ந்து முகமது முஸ்தாக் வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு வழக்கு பதிவு செய்து நதீமை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சமையல் பாத்திரங்களை பறிமுதல் செய்து செய்தனர்.

Tags:    

Similar News