உள்ளூர் செய்திகள் (District)

ஏலகிரி மலை அடிவாரத்தில் 2 டன் குப்பைகளை கொட்டி தீ வைத்த மர்ம நபர்கள்

Published On 2023-11-25 07:37 GMT   |   Update On 2023-11-25 07:37 GMT
  • கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
  • 3 மணி நேரம் எரிந்து தானாக அணைந்தது

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஏலகிரி மலை அடிவாரத்தில் சின்ன பொன்னேரி கிராமம் உள்ளது.

இங்குள்ள நியூ காலனி பிளாட் அருகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் நடப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள், 2 டன் குப்பைகளை வாகனம் மூலம் ஏற்றி வந்தனர்.மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள இடத்தில், குவியலாக கொட்டி தீ வைத்தனர்.

இதனால் அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. அந்த பகுதி முழுவதும் பரவி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கண்களில் எரிச்சலை உண்டாக்கியது. மேலும் அங்கு குடியிருக்கும் முதியவர்கள், குழந்தைகள் என பொதுமக்கள் நெடி தாங்க முடியாமல் மூச்சுத் திணறால் அவதிப்பட்டனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த தீ தானாகவே அணைந்தது.

எனவே இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இனிமேல் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டி எரிப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News