உள்ளூர் செய்திகள் (District)

மாற்றுத்திறனாளிகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2023-10-22 07:36 GMT   |   Update On 2023-10-22 07:36 GMT
  • திருப்பத்தூர் கலெக்டர் தகவல்
  • 22 விருதுகள் வழங்கப் பட உள்ளது

திருப்பத்தூர்:

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்க ளுக்கு மாநில விருதுகள் முதல்-அமைச்சரால் டிசம்பர் மாதம் 3-ந் தேதி வழங்கப்பட உள் ளது.

இதில் சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர், சிறந்த ஆசிரியர், சிறந்த சமூக பணி யாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறவனம், மாற்றுத் திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த் திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரி யர், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட் டுனர் மற்றும் நடத்துனர், பொதுக்கட்டிடங்களில் மாற் றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு, தனியார் நிறுவனங்கள் உள் ளிட்ட 22 விருதுகள் வழங்கப் பட உள்ளது.

இதற்கு இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக் கம் செய்து வருகிற 25-ந்தேதிக் குள் மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ வழங்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை திருப் பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரி வித்துள்ளார்.

Tags:    

Similar News