உள்ளூர் செய்திகள் (District)

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-11-13 08:12 GMT   |   Update On 2023-11-13 08:12 GMT
  • சாலையை ஆக்கிரமிப்பு செய்வதாக புகார்
  • போலீசார் பேச்சுவார்த்தை

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் ஊசிக்கல் மேடு கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ளியூர் பகுதியை சேர்ந்த சிலர் பொதுமக்கள் செல்லும் சாலையை ஆக்கிரமிப்பு செய்வதாகும் மேலும் ஊர் மக்களுக்கு தண்ணீர் செல்லும் குழாய் உடைத்து அந்த தண்ணீரை தக்காளி செடிக்கு விடுவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பைப் குடிநீர் குழாய் உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டறம்ப ள்ளி - திருப்பத்தூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் துறையினர் மற்றும் நாட்டறம்பள்ளி போலீசார் ஆகியோர் சாலை மறியல் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

மேலும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News